கால் நடை மருத்துவரின் சடலத்தையும் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்களுக்கு சிறையில் மட்டன் விருந்து.. கொந்தளிப்பில் மக்கள். !!
கடந்த சில நாட்களாக அதிகம் பேசப் பட்டுக் கொண்டிருக்கும் விடயம் ஹைதராபாத்தில் கால் நடை மருத்துவர் பிரியங்கா கற்பழித்து கொலை செய்யப் பட்டது தான். 20 வயதிற்கும் குறைவான 4 இளைஞர்களால் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப் பட்டார். இதில் குற்றவாளிகள் நால்வரையும் பொலீஸார் கைது செய்தனர்.
உடனடியாக இவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுங்கள் என கூறி மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கொலையாளிகளுக்கு ஹைதராபாத் சிறையில் மட்டன் கொடுத்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப் பட்டவர்களுக்கு தண்டனை கொடுக்காமல் பருப்பு சாதமும் பகலும் விரவில் மட்டனும் கொடுத்திருப்பது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றவர்கள் துடித்துக் கொண்டிருக்க மட்டன் விருந்து கொடுத்த பொலீஸாருக்கு எதிராக #ஹைதராபாத் பொலீஸ்# என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கி வருகின்றது. அது மட்டும் இன்றி அனைத்து இடங்களிலும் இவர்களுக்கு எதிராக போராட்டங்களை மக்கள் ஆரம்பித்துள்ளனர்..!!