பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகள் சுடப் பட்டது எப்படி.!? நள்ளிரவு 3.30 மணிக்கு நடந்தது இது தான்..!!
கடந்த 27ம் திகதி பணி முடித்து வீடு திரும்பிய ஹைதராபாத்தை சேர்ந்த கால் நடை மருத்துவர் நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப் பட்டார். இந்த செய்தி ஒட்டுமொத்த இந்தியாவை மட்டும் இன்றி உலக மக்கள் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியது. 26 வயதான பிரியங்காவின் மரணத்திற்கு நீதி கேட்டு மக்கள் போராடி வந்தனர்.
இந்த கொலை வழக்கில் ஆரிப் என்கிற பாஷா, ஷிவா, நவீன், சின்ன கேஷ்வலு ஆகியோர் கைது செய்யப் பட்டனர். இவர்களிடம் ஹைதராபாத் பொலீஸார் கடந்த 9 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஹைதராபாத் கமிஷ்னரும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுமான சாஜ்னார் பொலீஸாருக்கு கொடுத்த உத்தரவின் பேரில் கடுமையான விசாரணை இடம்பெற்றதுடன் பிரியங்காவை எப்படி கொலை செய்தார்கக் கற்பழித்தார்கள் என்பதனை விளக்கி காட்டுமாறு கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இவர்களை சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்ல 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. பொலீஸாருடன் அதிகாலை 3.30 மணிக்கு பிரியங்கா கொலை செய்யப் பட்ட இடத்திற்கு குற்றவாளிகள் சென்றுள்ளனர். அங்கு பிரியங்காவை கடத்தியது கற்பழித்தது போன்றவற்றை குற்றவாளிகள் நடித்து காட்டியுள்ளனர். அதன் போது அருகில் இருந்த புதர்
வழியாக ஷிவா, நவீன், கேஷ்வலு ஆகியோர் தப்பிச் செல்ல ஆரீப் என்கிற பாஷா நேர் வழியாக தப்பி ஓடியுள்ளான். நடப்பதை உணர்ந்த பொலீஸார் சுதாகரித்துக் கொண்டு விரட்டியதுடன் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். இதில் முதலில் நவீன், அடுத்து ஷிவா, அடுத்து கேஷ்வலு போன்றோர் கொல்லப் பட்டதுடன் இறுதியாக முக்கிய குற்றவாளியான ஆரிப் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளான்.
3.30 மணியளவில் நடந்த இந்த சம்பவமானது திட்டமிடப் பட்டதல்ல..தப்பிக்க முயற்சி செய்ததால் நடந்தது என பொலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளின் நெற்றி மற்றும் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளது குறிப்பிட தக்கது..!!