“சீதனமாக பணம் பொருள் எதுவும் வேண்டாம்” ஆனால் உங்கள் மகள் வரதட்சணையாக இதனை செய்ய வேண்டும்..!! வித்தியாசமான வரதட்சணை கேட்ட மணமகன்..! கொண்டாடும் மக்கள்..!!
தமிழ் நாட்டில் மாவட்ட ஆட்சியர் ஒருவர் வித்தியாசமான ஒரு விடயத்தை பெண் வீட்டாரிடம் வரதட்சணையாக கேட்ட விடயம் தற்போது வைரலாகி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு பிரபாகரன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவரது தாய், தந்தை, ஆடு, மாடுகள் மேய்த்தே இவரை படிக்க வைத்தனர். பொறியியல் படிப்பை முடித்த சிவகுரு எம்.டெக் முடித்தார்.
ஆனால் இவரது முழு எண்ணமும் ஐ ஏ எஸ் ஆகி தன் கிராமத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான். ஆனால் இந்த அளவு படிக்க வைத்ததே பெரிய விடயம் இதுக்கு மேல் எப்படி என நினைத்த சிவகுரு மொபைல் பழுது பார்க்கும் கடையொன்றில் வேலைக்கு சேர்ந்ததுடன் தனது ஐ ஏஸ் படிப்பை தொடர்ந்தார்.
விடாமுயற்சியால் தேர்வில் தமிழக அளவில் மூன்றாம் இடத்தையும் அகில இந்திய அளவில் 101ம் இடத்தையும் பெற்று தனது கனவை நிறைவேற்றிக் கொண்டார். அதன் பின் வழமைபோல் பெற்றோர் திருமணத்திற்கு மணப்பெண் பார்த்துள்ளனர். லட்சக் கணக்கில் பணம், வீடு கடை என வரதட்சணையுடன் பெண் தர பலர் வந்தனர்.
ஆனால் அவற்றை மறுத்த சிவகுரு தனக்கு மருத்துவர் ஒருவரே மனைவியாக வேண்டும் என்றார். அது போல மருத்துவரான கிருஷ்ணபாரதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். பெண் வீட்டார் சீதனமாக கொடுக்க நினைத்த அனைத்தையும் மறுத்த சிவகுரு பெண் வீட்டரிடம் சீதனமாக
என் மனைவி வாரத்தில் 2 நாள், அதாவது மாதத்தில் 8 நாட்கள் என் கிராமமான ஒட்டங்காடு கிராமத்தில் இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என வரதட்சணையாக கேட்டுள்ளார். இதற்கு ஒத்துக் கொண்டதால் மிக பிரமாண்டமாக திருமணம் இடம்பெற்றுள்ளது. தனது கிராமத்தின் மீதான பற்றுதலை வெளிப்படுத்திய சிவகுருவை ஊர் மக்கள் கொண்டாடி வருகின்றனர்…