எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் தனது பணியை தொடங்கவுள்ள மத்தள சர்வதேச விமான நிலையம்..!!
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சில விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறித்த விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர அதை கூறியுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு பிறகு 4 விமான சேவை நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்திற்கு வருகை தரும் என தாங்கள் நம்பிக்கை கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
60 டொலர் விலைக்கழிவு நிவாரணத்தை பயணிகளுக்கு வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த விமான நிலையத்தில் தரையிறங்கல் மற்றும் தரிப்பிட கட்டணங்களை நூறு வீதம் 2 ஆண்டுகளுக்கு தளர்த்தப்படவுள்ளது. அதன் பிரதிபலனை விமான சேவை நிறுவனங்களுக்கு பயணிகளுக்கும் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஷெஹான் சுமனசேகர கூறியுள்ளார்.