எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் – மஹிந்த தேசப்பிரிய
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலை நடத்தும் திகதி குறித்து தீர்மானம் முன்னெடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று ஒன்று கூடியிருந்தது. அதன்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்ட போதும், கொடிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீண்ட இழுபறியின் பின்னர் இன்றையதினம் பொதுத் தேர்தலுக்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.