ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச விடுத்த முக்கிய அறிவிப்பு..!!!
இலங்கையில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் அரச நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
எனது ஆட்சியின் கீழ் நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை புதிய பொருளாதார திட்டத்தின் கீழ் பராமரித்துச் செல்ல நடவடிக்கை எடுப்பபேன் எனவும், அரச நிறுவனங்கள் ஒருபோதும் நட்டமடைய கூடாது என்பதற்காக விசேட திட்டங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற தொழிற்சங்க உறுப்பினர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.