இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் படுகாயம்..!!
முல்லைத்தீவு – மல்லாவிப் பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணியளவில் இவ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இதுவரை கண்டுபிடிக்கவில்லை எனவும் மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாகவும் மல்லாவி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் துப்பாக்கிச்சூட்டின் போது 25 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.