ஸ்ரீலங்கா அதிபர் விடுத்த அதிரடி உத்தரவு.!!
ஸ்ரீலங்காவில் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து சிறு குற்றங்களை செய்து அதன் போது கைது செய்யப்பட்டுள்ள அனைத்து நபர்கள் குறித்தும் விசாரணைகளை வேகப்படுத்தி பயங்கரவாதத்துடன் ஈடுபடாதவர்கள் எல்லோரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை செயற்படுத்துமாறு ஸ்ரீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதற்கு உரிய அதிகாரிகளிடம் உத்தரவு விடுத்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு சபை ஒன்று கூடிய போது ஸ்ரீலங்கா அதிபர் இந்த உத்தரவை தெரிவித்தார்.மேலும் எமது நாட்டின் சுதந்திரம், பாதுகாப்பு,வேலைத்திட்டம், ஆகியன பற்றியும் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறைகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடல் நடத்தினர். நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள்பற்றி ஆராயப்பட்டது .
ஸ்ரீலங்காவில் நடைபெறும் மத நிகழ்வுகள் மற்றும் மக்கள் சந்திப்புக்கள் போன்ற இடங்களில் அதிக பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.இது எல்லாவற்றிலும் பார்க்க மிக முக்கியமானது என்றும் ஸ்ரீலங்கா அதிபர் கூறியுள்ளார்