வெலிகமவில் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்ட புத்தர் சிலை..!! கொந்தளிக்கும் சிங்கள இனத்தவர்கள்.!
காலி – மாத்தறை பிரதான வீதியில் வெலிகம ரெஸ்ட் அவுஸ் சந்திக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக கூறியுள்ளார்.மேலும் புத்தர் சிலை உடைக்கப்பட்ட இடம் தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையே நீண்ட காலமாக முறுகல் நிலை ஏற்ப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளார்.
புத்தர் சிலை சுமார் நூறு வருடங்களுக்கு அதிகமாக இவ் இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள இனத்துக்கு எதிராக செயற்படும் கும்பல் தான் இது போன்ற இழிவான செயலை செய்து இருக்க வேண்டும் என பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணையை வெலிகம பொலிஸார்
ஆரம்பித்துள்ளனர்.