குருநாகல் வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக வைத்தியசாலை நிர்வாகம் எடுத்துள்ள தீர்மானம்.!
குருநாகல் போதனா வைத்தியசாலையில், 2007 ஆம் ஆண்டு ஆரம்பம் இன்றுவரை நடைபெற்ற சிசேரியன் சத்திரசிகிச்சைகள் தொடர்பில் ஆராய, வைத்தியசாலை நிர்வாகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் 33,000 பேருக்கு சிசேரியன் சிகிச்சைகள் நடைபெற்றதாக வைத்தியசாலை நிர்வாகம் கூறியுள்ளது.
அவர்களுக்கு சிசேரியன் சிகிச்சையின் பின்பு தான் தாய்மார் குழந்தை பாக்கியத்தை இழந்துள்ளனரா என்பது தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
குருநாகல் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த, மகப்பேற்று வைத்தியர் ஷாபியால் செய்யப்பட்ட சிகிச்சைகள் பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென, வைத்தியசாலை நிர்வாகம் கூறினார்கள்.
வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக, குருநாகல் வைத்தியசாலையில் 1,000 க்கு அதிகமானவர்களின் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கூறினார்கள்.