உயிருக்கு போராடும் சுஜித்திற்காக 8 கிராம மக்கள் சேர்ந்து செய்த செயல்..! வைரலாகும் தகவல்..!!
கடந்த 25ம் திகதி மாலை 5.40 மணியளவில் திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த 2 1/2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுமார் 50 மணித்தியாலங்களை கடந்து இன்னும் மீட்பு பணி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இது வரை பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுவிட்டது.
இருப்பினும் அனைத்தும் தோல்வியை தழுவியது. இருப்பினும் 7 பேரிடர் மீட்பு குழுவினர் உட்பட வைத்தியர்கள் பொலீஸார் என பலரும் குழந்தையை மீட்கும் வரை காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்று தீபாவளி தினம் ஹிந்துங்களின் முக்கிய தினம், இருப்பினும் பெரிதாக யாருமே தீபாவளி கொண்டாடவில்லை காரணம் சுஜித்.
இப்படி இருக்கையில் சுஜித்தின் கிரமமான நடுகாட்டுப்பட்டி கிராமத்தை சுற்றி உள்ள 8 கிராம மக்கள் தீபாவளி கொண்டாட்டத்தை நிறுத்தியுள்ளனர். சுஜித்தை மீட்டால் மட்டுமே தீபாவளி என முடிவு எடுத்திருந்த நிலையில் சுஜித்தை மீட்காததால் ஒரு வீட்டில் கூட தீபாவளி கொண்டாட்டம் இல்லையாம்
அத்துடன் 8 கிராமத்திலும் ஒரு பட்டாசு கூட வெடிக்கவில்லையாம். சுஜித்திற்காக மக்கள் தங்கள் சந்தோசத்தை விட்டு விட்டு பிரார்த்தனை செய்து வருவது கண் கலங்க வைக்கிறது. ஆண்டவா இவர்கள் பிரார்த்தனையை நிறைவேற்று..!!