குழந்தை சுஜித்தின் தற்போதைய உண்மை நிலை பற்றி அறிவித்த அமைச்சர் விஜய பாஸ்கர்..! சோகத்தில் மக்கள்..!!
குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து 74 மணி நேரங்களை கடந்துவிட்டது தற்போது வரை குழந்தை மீட்கப்படவில்லை. எப்படியாவது இன்று மீட்டு விடுவோம் என உறுதியாக கூறி வருகின்றனர். இருப்பினும் இயற்கையும் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றது.. ஏற்கனவே பாறை செல்லும் வழியை தடுக்கிறது. அடுத்து மழை பெய்து மனதை நோகடிக்கிறது.
இதனால் பணி தமதமாகிக் கொண்டிருக்கின்றது. 55 அடி வரை குழி தோண்டப் பட்டுள்ள நிலையில் ரிக் இயந்திரத்தால் இதை விட செல்வது சவாலாக உள்ளது. 170 அடி ஆழம் வரை தோண்டக் கூடிய ரிக் இயந்திரம் 55 அடிக்குமேல் செல்ல மறுக்கிறது.
இது இப்படி இருக்கையில் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டிருந்தார், இருப்பினும் சிலர் அதனை பொய் என கூறிவந்தனர். தற்போது அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்கள் குழந்தை 60 மணி நேரமாக எந்த அசைவும் இல்லாமல் இருக்கிறது..
அத்துடன் குழந்தையின் சுவாசமும் சிறிதளவு கூட எங்களால் உணர முடியவில்லை என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 74 மணி நேரங்கள் 2. 1/2 வயது குழந்தை உணவு, நீர் இன்றி இருப்பதென்பது கடினம் என வைத்தியர்களும் கூறி வருகின்றனர். தொடர்ந்தும் குழந்தையை மீட்கும் போராட்டம் நடந்துகொண்டிருக்கின்றது.!!