தன் உயிரை கொடுத்து பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய இளைஞர். சோகத்தில் உறவினர்கள்!!
குழந்தைகளின் உயிரை காப்பாற்றி விட்டு இறந்து போன இளைஞர் தொடர்பான செய்திகள் வெளியாகி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை கொடுத்த நிலையில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பார்க், பீச் என அழைத்துச் சென்று மகிழ்ச்சிப் படுத்துகின்றனர்.
நேற்றைய தினம் தாயொருவர் தனது குழந்தைகளுடன் கடலில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென தண்ணீரில் அடித்து செல்வதை நண்பர்களுடன் குளிக்க சென்ற மத்துகம, கழுபஹன பிரதேசத்தை சேர்ந்த உதய குமார என்ற 31 வயது இளைஞர் பார்த்துள்ளார்.
குழந்தைகளை காப்பாற்ற பெண்கள் சிலர் முயன்ற நிலையில் திடீரென தண்ணீரில் குதித்த உதய குமார தாய் மற்றும் குழந்தைகளை காப்பாற்றி பெண்களிடம் கொடுத்துள்ளார். அதன் போது எதிர்பார்க்காத நேரத்தல் மேலே எழுத்த கடல் அலை உதய குமாரவை இழுத்துச் சென்றுள்ளது.
நண்பர்கள் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் மீட்கப் பட்ட உதயகுமாரவை வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். உதய குமார சிவில் பொறியியலாளராக பணிபுரியும் நிலையில் சில மாதங்களில் திருமணம் நடக்க இருப்பது குறிப்பிட தக்கது.!