பூஜித் மற்றும் பெர்ணாண்டோவிற்கு எதிரான விசாரணைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பம்….!
ஈஸ்டர் தினத் தாக்குதலை தடுக்க தவறியதாக குற்றம் சுமத்தி, கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோருக்கு எதிரான மனுக்கள், இந்த மாதம் 12ம் திகதி விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும் இதற்காக 7 பேர் கொண்ட பூரண நீதியரசர்கள் இந்த வழக்கை விசாரிக்க நேற்று தினம் பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமித்தார். இந்த மனுக்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதி, பூரண நீதியரசர்கள் வழக்கை விசாரிக்க விசாரணையை மேற்கொண்டனர். பிரதம நீதியரசர் தலைமையிலான இதை விசாரிக்க நீதியரசர்களான புவனேக அலுவிஹார, சிசிர ஆப்ரு, பிரசன்ன ஜயவர்தன, ப்ரியந்த ஜயவர்தன, எல்.டி.பி.தெஹிதெனிய மற்றும் மூர்து பெர்ணாண்டோ ஆகியோர் அடங்கியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக தற்போது விளக்கமறியலிலுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ மற்றும் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு பிணை வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்றையதினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தெரிவிக்கப்படவுள்ளது. ஏப்ரல்21 தாக்குதல் விடயத்தில் கடமை தவறியக் குற்றச்சாட்டின் கீழ், அவர்களை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் அறிவுறுத்தி இருந்தார். மேலும் இதன்அடிப்படையில் அவர்கள் இருவரும் கடந்த 3ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப் பட்டனர்.