இந்திய பிரதமருக்கும் சீனா ஜனாதிபதிக்கும் இடையில் விசேட சந்திப்பு…!!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கிற்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது தீவிரமயம் மற்றும் பயங்கரவாதம் என்பனவற்றை பொது சவால்களாக எதிர்த்து செயற்பட இந்தியாவும், சீனாவும் ஒன்றிணையவுள்ளது என இந்த பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக இந்திய அரசாஙகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கிற்கும், பிரதமர் மோடிக்கும் இடையில் மாமல்லபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நேற்ற நடைபெற்ற நிலையில் பல்வேறு இடங்களையும், கடற்கரைக் கோயில் அருகே இடம்பெற்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை இரண்டு நாடுகளின் தலைவர்களும் பார்வையிட்டனர்.
அதற்கு இடையியே இருவருக்கும் இடையில் பல்வேறு உரையாடல்கள் நடைபெற்றதுடன், வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிங்களின் பெருமைகளை சீன ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் எடுத்து கூறியுள்ளார்.
இந்த நிலையில், இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ள சீன ஜனாதிபதி சென்னையில் இருந்து பிற்பகல் வேளையில் நேபாளத்திற்கு விஜயம் செய்ய உள்ளதுடன், பிரதமர் மோடி புதுடில்லிக்கு பயணமாகவுள்ளார்.