ட்விட்டரில் கொந்தளிக்கும் டோனியின் மனைவி…!!! நடந்தது என்ன தெரியுமா???
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் மனைவி அண்மையில் அவரது கணவருடைய சொந்த ஊரான ராஞ்சியில் வசித்து வருகின்ற நிலையில் அங்கு அடிக்கடி மின்சார துண்டிப்பதால் அவர் எதிர்கொண்டு கொண்டுள்ள சிரமங்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ ராஞ்சியில் உள்ள மக்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் மின்சார துண்டிப்பை அனுபவித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் 4 முதல் 7 மணி நேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. இன்றைய தினம் மட்டும் கடந்த 5 மணி நேரமாக மின்சாரம் இங்கு இல்லை. மின் துண்டிப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. பண்டிகை நாட்கள் தற்போது இல்லாமல் இருப்பது ஒரு ஆறுதலான விஷயம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த இணையதளவாசிகள், இங்கு மட்டுமல்ல பல பகுதிகளிலும் இதேபோன்று கொடுமை நடந்து வருவதாக கூறி, சாக்ஷிக்கு ஆதரவாக கூறினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் தலைமையிலான பாஜக ஆட்சி இடம்பெற்று வருகின்றது. இவர் தனது தேர்தல் வாக்குறுதியில் 2019-க்குள் மின் மிகை மாநிலமாக ஜார்க்கண்ட் மாறும் என்று உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.