பிறப்புறுப்பு இன்றி பிறந்து மருத்துவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள குழந்தை.! அதிர்ச்சியில் வைத்தியர்கள்..!!
இறைவன் படைப்பு விசித்திரமானது என கூறுவார்கள் இறைவன் படைப்போ இயற்கையின் கோபமோ அனைத்துமே தற்போது கண் முன் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. அறிவியல் இவற்றை பார்த்து வியந்துகொண்டிருகின்றது. அண்மையில் துருக்கியில் இடம்பெற்ற சம்பவம் மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
துருக்கியில் இளம் தம்பதி ஒன்றுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. உடல் ஆரோக்கியத்துடன் பிறந்துள்ள குழந்தைக்கு பிறப்புறுப்பு இல்லாமல் இருப்பதை கண்ட வைத்தியர்கள் அதிர்ந்துள்ளனர். இப்படியான குழந்தை பிறப்புகள் 10 – 30 மில்லியன் பிறப்புகளில் ஒன்று என கூறியுள்ள மருத்துவர்கள் இது தொடர்பான ஆய்வில் இறங்கியுள்ளனர்.
ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைக்கு சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடல் இரண்டிற்கும் இடையில் விசித்திரமான தொடர்பு இருப்பதால் தான் பிறப்பு உறுப்பு இல்லை என குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் இது குறித்து மேலதிக சோதனைகளை எர்கபன் பல்கலைக்கழகம் தொடர்ந்து வருகிறது. இது தொடர்பான முழுமையான தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் சோதனை முடிவில் அறிவிக்கும் என கூறியுள்ளது..!!