“அப்பா எங்கள் வாழ்க்கையை சீரழித்துவிட்டார்” அப்பாக்களிடம் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளின் இறுதி வேண்டுகோள்..! தகாத உறவால் நடந்த கொடுமை..!!
“எங்கள் வாழ்க்கையை அப்பா சீரழித்துவிட்டார்.நல்ல அப்பா கிடைத்தவர்கள் வரம் பெற்றவர்கள், எங்களுக்கு அந்த வரம் கிடைக்கவில்லை, அப்பாக்களே உங்கள் மகள்களுக்கு நல்ல அப்பாவாக இருங்கள் நாங்கள் செல்கிறோம்” என்று தனது தாய்மாமாவிற்கு வாட்சாப்பில் தகவல் அனுப்பிவிட்டு தாயுடன் சேர்ந்து இரண்டு சிறுமிகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
!Advert!
பெங்களூர் மின் வாரியத்தில் வேலை பார்த்துவந்த சித்தய்யா என்பவருக்கு திருமணமாகி மனசா மற்றும் பூமிகா என இரண்டு மகள்கள் உள்ள நிலையில் சித்தய்யா வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இது மனைவி ராஜேஷ்வரிக்கு தெரிய வந்தபோது குழந்தைகள் வளர்ந்துவிட்டனர் இவற்றை விட்டுவிடுங்கள் என கூறியுள்ளார்.
ஆனால் அதனை கண்டுகொள்ளாத சித்தய்யா குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வர தொடங்கி விட்டார். எவ்வளவோ கூறியும் கேட்காததால் ராஜேஸ்வரி அதனை விட்டுவிட்டார். ஆனால் மகள்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
!Advert!
கல்லூரியில் முதலாம் ஆண்டில் படிக்கும் மானசா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து தாயிடம் கூறியுள்ளார். அதனால் 17 வயதான மானசா, 15 வயதான பூமிகா மற்றும் தாய் என மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தற்கொலை செய்வதற்கு முன் தனது மாமாவிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்பியுள்ளார். மெசேஜ் பார்த்து பயத்துடன் வந்த தாய்மாமாவிற்கு மூவரின் சடலம் மட்டுமே கிடைத்துள்ளது.! சடலத்தை மீட்ட பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்..!!
!Advert!