இலங்கை பண்டாரகம பிரதேசத்தில் முஸ்லீம் பெண்ணின் ஆடைகளை கிழித்து அட்டகாசம்..!
இலங்கையில் பண்டாரகம பொலீஸில் முஸ்லீம் பெண் ஒருவரால் கொடுக்கப் பட்ட புகாரை தொடர்ந்து அந்த பிரதேசத்தை சேர்ந்த 6 நபர்களை பொலீஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த முஸ்லீம் யுவதி ஒருவர் சிங்கள நபரை திருமணம் செய்து
சிங்கள முறையில் வாழ்ந்து வந்துள்ளார். இதனால் அவருக்கு தினமும் சில முஸ்லீம் நபர்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். சம்பவ தினதன்று வீட்டிற்கு புகுந்த அவர்கள் அறைகுறை ஆடையில் ஏன் இருக்கிறாய் என கேட்டு குறித்த பெண் அணிந்திருந்த ஆடையை கிழித்ததுடன் வீட்டிற்கு வெளியே இழுத்துச் சென்றுள்ளனர்.
அத்துடன் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சேதப் படுத்தியுள்ளனர். இது தொடர்பாக குறித்த பெண் பண்டாரகம பொலீஸில் ஷரி ஆ சட்டத்தின் கீழ் தன்னை குறித்த முஸ்லீம்கள் சித்திரவதை செய்ததாக புகார் கொடுத்ததை தொடர்ந்து
6 சந்தேக நபர்களையும் கைது செய்த பொலீஸார் பாணந்துறை நீதிமன்றில் ஆஜர் படுத்தியுள்ளனர். அதன் போது நீதிபதி எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.