வெளி நாட்டில் இருந்து சென்னை வந்த கணவனுக்கு கிடைத்த எஸ் ஐ உடன் மனைவி செய்த லீலைகளின் வீடியோக்கள்..! சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுத்த கணவர்..!
இன்றைய காலத்தில் ஆண்களை விட பெண்களே அதிகமாக தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். அண்மையில் சென்னையில் நடந்த சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர வைத்துள்ளது. சென்னை கே.கே நகரை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவருக்கு சுவாதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஜனார்த்தனன் துபாய்க்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு உழைத்த அனைத்து பணத்தையும் மனைவிக்கு அனுப்பியுள்ளார். 4 வருடங்கள் முடிந்து மீண்டும் வீட்டுக்கு வந்த போது மனைவியிடம் பணம் நகை எதுவுமே இல்லை.
மனமுடைந்த ஜனார்த்தனன் பொலீஸில் புகார் கொடுத்துள்ளார். ஜனார்த்தனன் துபாய் போனதில் இருந்து அவரது மனைவி சென்னை பொலீஸ் எஸ் ஐ ராஜேஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது கள்ளக் காதலாக மாற ஜனார்த்தனன் அனுப்பிய பணத்தை ராஜேஷ் மற்றும் சுவாதி செலவு செய்துள்ளனர்.
செல்பி, பார்ட்டிகள் என இருவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். இவற்றை கண்ட ஜனார்த்தனன் சென்னை பொலீஸ் கமிஷனர் அலுவகலத்தில் புகார் கொடுத்துள்ளார். இதில் என் மனைவி நான் அனுப்பிய பணம் மற்றும் குழந்தைகளின் நகை அனைத்தையும் ராஜேஷ் அவர்களுக்கு கொடுத்துள்ளார்.
தயவு செய்து பணத்தையும் என் குழந்தைகளையும் மீட்டுத் தாருங்கள். என குறிப்பிட்டதுடன் அவர்களின் தகாத வீடியோக்கள், புகைப்படங்களையும் இணைத்துள்ளார்..!!