கொரோனா வைரஸை தடுக்க முயற்சிக்கும் நேரத்தில் அயலவருக்கு கொரோனா வைரஸை பரப்பும் பெண்..! அதிர வைக்கும் வீடியோ இதோ..!
1000 மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் மரணமடைந்துள்ள நிலையில் கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டு பிடிப்பவர்களுக்கு கோடிகணக்கான ரூபாய் பரிசு தருவதாக சீனா அரசு அறிவித்துள்ள நிலையில் பெண் ஒருவர் கொரோனா வைரஸை பக்கத்து கட்டிடங்களுக்கு பரப்புவதற்காக செய்யும் செயல் சிசிடிவி கேமராவின் மூலம் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் எச்சில் மூலமாகவும், சளி, சுவாசம் மூலமாகவும் மக்களுக்கு பரவ கூடியது. இந்த வைரஸினால் பாதிக்கப் பட்டவர் சுமார் 16 பேருக்கு இதனை இலகுவாக பரப்பி விடலாம். இதனால் தான் இந்த வைரஸை கட்டுப் படுத்த முடியாமல் சீனா தடுமாறி வருகிறது.
இந்த நிலையில் வுகான் பகுதி குடியிருப்பு ஒன்றில் ஒரு பகுதியை சேர்ந்த அனைவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் தனிமை படுத்தப் பட்டுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப் பட்ட பகுதில் இருக்கும் பெண் நள்ளிரவில் பாதிக்கப் படாத பகுதிக்கு சென்று எச்சில் துப்புகிறார்.
மக்கள் வருகிறார்களா என பார்த்தப் படி மக்கள் நடமாடும் பகுதியில் இந்த செயலை செய்கிறார். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளை பார்த்த மக்கள் குறித்த பெண் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி புகார் கொடுத்துள்ளனர்..!