கொழும்பு தெஹிவளை தற்கொலை தாக்குதலில் சம்மந்தப் பட்ட தீவிரவாதி கைது..!
இலங்கையில் தீவிர வாத தாக்குதல் நடந்து இன்றுடன் ஒரு வாரம் கடந்த பின்பும் பதற்றம் குறையாத நிலையில் நாட்டு மக்கள் உள்ளனர். ஆங்காங்கே குண்டுகள் மற்றும் ஆயுதங்களை விஷேட அதிரடி பட்சியினருடன் இணைந்து பொலீசார் கைப்பற்றிய படி உள்ளனர். இந்த நிலையில் தெஹிவளை பகுதியில் நடந்த தத்கொலை குண்டு தாக்குல்தாரியின் முக்கிய சகா என கருதப் படும் ஒருவர் பொலீஸாரால் கைது செய்யப் பட்டு விசாரிக்கப் பட்டு வருகிறார்.
தெஹிவளையில் குண்டு வெடிப்பதற்கு முன்பு தற்கொலைதாரி தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு சென்றுள்ளான். அவனது இலக்கு தாஜ் சமுத்திரா ஹோட்டலாக இருந்துள்ளது ஆனால் அங்கு தற்கொலை குண்டு வெடிக்கவில்லை இதனை பரிசோதனை செய்ய தெஹிவளை எடுத்து வந்து தனது அறையில் வைத்து பரிசோதிக்கும் போதே குண்டு வெடித்தது.
தற்கொலை தாரியின் குண்டு தெஹிவளையில் வெடிப்பதற்கு முன் நபர் ஒருவரிடம் குறித்த தீவிரவாதி தொலைபேசியில் பேசியுள்ளது தெரியவந்ததை தொடர்ந்து அளுத்கமை பகுதியை சேர்ந்த 24 வயது நபரே அது என பொலீஸார் கண்டு பிடித்துள்ளனர். குறித்த இளைஞனிடம் விசாரணை நடத்திய போது ஐ எஸ் தீவிர வாத அமைப்பின் உறுப்பினர் என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அளுத்கமை தர்கா நகரில் 40 வயதான ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”