கர்ப்பமாகி குழந்தை பெற்ற எடுத்த விதவைப்பெண்..!! பொலிஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!
இன்றைய காலத்தில் பெண்கள் சுதந்திரமாக வெளியில் செல்லவே முடியாது. சிறியவர் தொடக்கம் வயதான பெண்கள், விதவை பெண்கள் என எந்த பாரபட்சம் இன்றி மன அளவிலும் உடல் அளவிலும் காயம் அடைந்து வருகின்றன. நாளுக்கு நாள் உலகம் முழுவதும் பெண்களை பாலியல் பலகாரம் செய்து வருகின்றன.
கர்ப்பமாகி குழந்தை பெற்ற எடுத்த விதைவைப் பெண்ணின் செயல் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்களுக்கு முன்னர் இந்தியாவின் நாக்பூரை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணின் கணவன் உயிரிழந்தார். இந்த நிலையில் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்த குறித்த பெண் கர்ப்பமாகி இரண்டு வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.
மருத்துவர்கள் விதவை பெண் எப்படி கர்ப்பமாக முடியும் என சந்தேகப்பட்ட நிலையில் பொலிசுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு வந்த பொலிஸார் விதவைப்பெண்ணிடமும், அவர் மைத்துனரிடமும் விசாரணையை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொலிசார் தெரிவிக்கையில், கடந்த பிப்ரவரி மாதம் விதவை பெண் வீட்டில் தனியாக இருந்த போது 22 வயதுடைய அவினாஷ் என்ற இளைஞன் வீட்டுக்குள் புகுந்து விதவைப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதையடுத்து அங்கு வந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் மைத்துனர், அவனை பிடித்து அடித்தார், ஆனால் பொலிசில் இது தொடர்பாக எந்தவொரு புகாரும் கொடுக்கப்படவில்லை.
இதை பொலிஸில் சொன்னால் குடும்ப கெளரவம் கெட்டு விடுமோ என்று பயந்து இவ்வாறு அவர்கள் செய்துள்ளனர். பின்னர் கர்ப்பமான விதவை பெண்ணை பிரசவ நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு குழந்தை பிறந்த பின்னர் குழந்தையின் தந்தை தொடர்பாக விசாரித்த போது அவர்கள் மழுப்பியதால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் எங்களுக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். தற்போது விதவையை பலாத்காரம் செய்த அவினாஷை கைது செய்துள்ளோம், அவனை காவலில் வைத்து 28 ஆம் திகதி வரை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.