கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் 7வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை…!!!
டெல்லியில் கொடிய நோயான கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் 7வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. நேற்றைய தினம் இந்தியா மக்களுக்கு உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை தடுக்க வேண்டும் என்று கூறினார்.
எதிர்வரும் 22 ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து நேற்று முன்தினம் காலை டெல்லி வந்த 35 வயதான இளைஞன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு தலைவலியும் கடுமையாக இருந்ததால், உடனடியாக இரவு 9 மணியளவில் டெல்லியில் உள்ள சப்தர்ஜிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென மருத்துவமனையின் 7வது வார்டில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவலறிந்து விரைந்து சென்ற பொலிசார் இளைஞனின் உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.