ஈரானிய விமான விபத்திற்கு காரணம் தொழில்நுட்ப கோளாறு அல்ல..170 பேரின் உயிரை பறித்தது ஈரான் தான்..! கனடா பிரதமரின் அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சியில் மக்கள் ..!!
ஈரானில் இருந்து புறப்பட்ட உக்ரைனுக்கு சொந்தமான ps752 ரக விமானம் சில மணி நேரங்களில் தீப்பிடித்து விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த சுமார் 170 பயணிகள் மரணமடைந்தனர். இந்த செய்தி உலகளாவிய ரீதியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, ஈரானிய தளபதி சுலைமானியை அமெரிக்கா ஆளில்லா விமானம் குறி பார்த்து அழித்தது,
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் படைத்தளங்கள் மீது ஈராக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது, இரு நாடுகளும் தாக்குதல் நடத்தி தங்கள் பலத்தை நிரூபிக்க முயற்சி செய்துகொண்டிருக்கின்றது. இந்த நிலையில் விமான விபத்தை சாதாரணமாக பார்க்க முடியவில்லை, அமெரிக்காவின் சூழ்ச்சியாக இருக்குமா என சிந்திக்கும் போதே..
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என ஈரான் அறிவித்தது. அத்துடன் விமானத்தின் விபத்திற்கான காரணத்தை அறிய கூடிய கறுப்பு பெட்டியையும் ஈரான் கொடுக்க மறுத்தது. இந்த நிலையில் குறித்த விமான விபத்தில் 60 திற்கு மேற்பட்ட பிரஜைகளை இழந்த கனடா நாட்டு பிரதமர் கருத்து தெரிவிக்கையில் உயிர் இழந்த அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்.
விமான விபத்திற்கு காரணம் தொழில்நுட்ப கோளாறு அல்ல, ஈரானின் ஏவுகணை தாக்குதலே காரணம். விமானம் பறக்க ஆரம்பித்து சில நிமிடங்களில் அமெரிக்கா தளங்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதலின் போது ஏவுகணை விமானத்தை தாக்கு உள்ளது என தெரிவித்துள்ளார். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..!!