பிள்ளையை பாடசாலை அனுப்பும் தாய்க்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் அரசு நிதியில் இருந்து வழங்கப் படும்..! மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!
மாநில முதல்வர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருப்பவர் ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி. பதவி ஏற்ற நாளில் இருந்து பல அதிரடிகளை செய்து வருகிறார், பொதுவாக தங்கள் குடும்பங்களுக்கு பயனளிக்கும் விடயங்களை அறிமுகப் படுத்தும் அரசியல் வாதிகள் முன் மக்களுக்கு எது பயனளிக்குமோ அதை செய்து வருகிறார்.
அண்மையில் ஜெகன் மோகன் ரெட்டியின் அறிவிப்பானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு தொடந்து அனுப்பும் வறுமை கோட்டின் கீழ் வாழும் தாய்மாருக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் அரசு வழங்குகிறது.
ஏழ்மை காரணமாக பள்ளி செல்லாமல் இருக்கும் 82 லட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தினால் பயன் பெறலாம். இதற்காக அரச நிதியில் இருந்து 6435 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி குழந்தைகளின் கல்வி பின் தங்கி உள்ளது, கஷ்டப் பட்ட குடும்பத்தில் ஒருவர் தனது படிப்பை முடித்து விட்டால் அந்த குடும்பம் கஷ்டப் பட்ட குடும்பத்திற்குள் சேராது.
கல்வியை கொடுத்தால் போதும் அதற்காக தான் இந்த முயற்சி. குடும்ப கஷ்டத்திற்காக குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல் பள்ளிக்கு இனி அனுப்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்..!!