இப்படியுமா கேட்பார்கள் வரதட்சணை? மணமகனை அலையவிட்ட மணப்பெண்!
இஸ்லாமிய முறைத் திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மணமகன்தான் வரதட்சணை கொடுப்பது வழக்கம்.
அதன்படி, வீடு, பணம், நகை, வாகனம், காணி, கடை எனப் பல விதமான சொத்துக்கள் வரதட்சணையாக வழங்கப்படும்.
ஆனால், கேரளாவில் மணப்பெண் ஒருவர் வித்தியாசமான முறையில் வரதட்கணை கேட்டு மணமகனை அலையவிட்டுள்ளார்.
கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் இஜாஸ் ஹக்கிம். இவர் ஒரு சமூக செயற்பாட்டாளர் ஆவார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த அஜ்னா ஹசீம் என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், மணமகனிடம் வரதட்சணையாக புத்தகங்கள் சிலவற்றை மணப்பெண்ணான அஜ்னா ஹசீம் கேட்டுள்ளார்.
அதன்படி, சுமார் 80 புத்தகங்களின் பெயர்களைக் கொடுத்து அவற்றை வரதட்சணையாகத் தரும்படியும் அவர் கோரினார்.
இதையடுத்து மணமகன், தனது வருங்கால மனைவியின் ஆசைப்படி கடை கடையாகச் சென்று புத்தகங்களைச் சேகரித்துள்ளார். அத்துடன், கடைகளில் கிடைக்காத புத்தகங்களை இணையங்களிலிருந்து பெற்றுள்ளார்.
அத்துடன், மனைவி கேட்ட புத்தகங்களுடன் மேலும் சில புத்தகங்களைச் சேர்த்து, 100 புத்தகங்களாக அவர் கொடுத்து திருமணம் முடித்துள்ளார்.
இந்த சுவாரஸ்ய சம்பவம் தற்போது இணயங்களில் பரவி வருகின்றது. அத்துடன், பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றது.