ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேன மீது குற்றம் சுமத்துகிறாரா ரொஷான் ரணசிங்க.??
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேன தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். மேலும் இவர் ஜனாதிபதியின் குடும்பத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மத்திய மாகாண சபை உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேன தன்னை கொலை செய்வதாக தெரிவித்திருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில் வைத்து நேற்று இதனை கூறியுள்ளார்.
மேலும் இந்த கொலை மிரட்டல் தொடர்பாக பொலன்னறுவை பொலிஸார் எந்த ஒரு நடவடிக்கையினையும் இதுவரைக்கும் மேற்கொள்ளாமையினால், தான் கொலை அச்சுறுத்தல் தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு தெரியபடுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் அவரும் எந்தவித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த கொலை மிரட்டல் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினரிடமும் தான் தகவல் தெரிவித்ததாகவும் எனினும் கொலை அச்சுறுத்தல் சம்பந்தமான விடயங்களை தாம் விசாரிப்பதில்லை என அவர்கள் குறிப்பிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
மேலும் இதனை தொடர்ந்து நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படு என்றும் தெரிவித்தார்.