ஸ்ரீலங்காவில் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க உதவி வழங்க தயார் – பிரதமர் நரேந்திர மோடி
ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடன் தொலைபேசி மூலமாக இன்று மதியம் உரையாடிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதத்தை அடியோடு அழிப்பதற்கு இந்தியா எந்த வகையான உதவிகளையும் வழங்கத் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இடர் நிலைக்கு, வருத்தம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்கமும், அங்குள்ள மக்களும் இலங்கையுடன் கைகோர்த்திருப்பதாக, குறிப்பிட்டுள்ளதுடன், இவ் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவினைப் பலப்படுத்தும் நோக்கில் உதவிகளைப் புரியத் தமது தரப்பு தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.