துடைக்க துடைக்க நாகபூசணி அம்மனின் கண்களில் வடியும் இரத்தக் கண்ணீர் குவியும் மக்கள்..இலங்கையில் அடுத்த அழிவின் அறிகுறியா.? வீடியோவை பாருங்கள்..!
நாட்டில் நடந்து வரும் வன்முறைகள் மக்களை பீதியடைய வைத்திருக்கும் இந்த நிலையில் கடவுளின் கண்ணீரும் மக்களை அதிர வைத்துள்ளது. ஏப்ரல் 21ம் திகதி தாக்குதலுக்கு முன்பு களுத்துறையில் மாதா சிலை ஒன்று கண்ணீர் வடித்தது. இதனை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் தாக்குதல் நடந்ததன் பின் இதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியது. தற்போது அதே போல் ஒரு சம்பவம் வவுனியா சுதந்திரபுரத்தில் நடந்துள்ளது. புதூர் நாகபூசணி அம்மன் & நாதகம்பிரான் ஆலயம் உள்ளது.
இந்த சிறிய கோயிலில் இருக்கும் நாக பூசணி அம்மன் இரத்தக் கண்ணீர் வடித்து வருகிறார். காலையில் பூஜை செய்வதற்காக பெண் ஒருவர் வந்துள்ளார். அதன் போது அம்மனின் கண்களில் இரத்தம் போல் இருந்துள்ளது. அதனை ஒரு முறைக்கு இருமுறை துடைத்தும் மீண்டும் வடிந்துள்ளது.
இதனால் பதற்றம் அடைந்த பெண் கோயில் தொண்டர்கள் சிலரை அழைத்து வந்து காட்டியுள்ளார். அதன் அவர்களும் துடைத்த போது இரத்தம் நிற்கவில்லை.
இதற்கிடைகில் மக்கள் குவிந்துவிட செய்தி வைரலாகியுள்ளது. இதனை காண வவுனியா மக்கள் படையெடுத்து வருகின்றனர். கண்ணீர் வடியும் நாகபூசணி அம்மனின் வீடியோ உள்ளே..