தென்னிலங்கையில் மீண்டும் பதற்றமா?? அச்சத்தில் பொது மக்கள்..!!
இலங்கை நீர்கொழும்பில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக அங்கு அடுத்தடுத்து வன்முறைகளும் மக்களை அச்சுறுத்தும் வகையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முஸ்லிம் வர்த்தக நிலையங்கள்மற்றும் முஸ்லீம் கடைகளை தற்காலிகமாக மூடுமாறு பொலிஸார் உத்தரவிட்டார்.
!Advert!
கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியன் உருவச் சிலையை மர்ம நபர்கள் சேதம் விளைவித்தமை தொடர்பில் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் மனவேதனை அடைந்தார்கள்.
மர்மநபர்கள் தாக்கிய காரணத்தால் கட்டுவப்பிட்டிய பகுதியில் உள்ள அனைத்து மக்களும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
!Advert!
மேலும் இதனால் சட்டத்திற்கு புறம்பாக இனவாத வெறியை தூண்டுதால், பயங்கரவாதத்தை நாட்டிற்கு எதிராக திருப்பி விட்டு அதில் பல தீய சக்திகள் குளிர்காய முற்படுகின்றனர்.
கட்டுவப்பிட்டி பகுதியில் இடம்பெற்று வரும் பதற்ற நிலையை தொடர்ந்து அங்கு அதிகளவான இராணுவப் படையினர் மற்றும் பொலிஸார்கள் குவிக்கப்பட்டதோடு, தீவிர பாதுகாப்பும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.