காதலுக்காக பொலீஸ் காலில் விழுந்த பிரபல ரவுடி ராகுல். சினிமாவை மிஞ்சும் காதல் காட்சி..!!
படங்களில் போல் இளைஞர் ஒருவரின் நிஜ வாழ்விலும் காதல் வந்துள்ளது அதிர்ச்சியும் அதே நேரம் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொலை, கொள்ளை என்றால் அடிக்கடி பொலீஸாரால் தேடப்படும் பெயர் பிரபல ரவுடி ராகுல் தர்சனா.
எத்தனை குற்றங்களை வேண்டுமானாலும் செய்துவிட்டு பொலீஸாரிடம் இருந்து இலகுவாக தப்பிவிடும் குற்றவாளி தான் இந்த ராகுல் தர்சனா. இவர் பிரபல வர்த்தகர் மன்மோகன் கோயல் என்பவரை கொலை செய்ததாக கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் ராகுல் சூரஜ்பூர் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
!Advert!
அதன் போது நீதிமன்றத்தில் பணிக்கு நின்ற பெண் பொலீஸுடன் பழக்கம் ஏற்பட்டது. இது ஐந்து வருடங்களாக தொடர்ந்த நிலையில் சாதாரண பழக்கம் நட்பாகி காதலாக மாறியது. அதன் பின் சிறையில் இருந்து விடுதலையான ரவுடி ராகுல் பொலீஸ் காதலியை திருமணம் செய்துகொண்டார்.
என் கரடு முரடான வாழ்வை பூஞ்சோலையாக மாற்றியவளை மாலை சூடி ஏற்றுக் கொண்டேன் என திருமண புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்தவர்கள் உத்திரப்பிரதேச பொலீஸ் மீது விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
!Advert!
குற்றவாளியின் காலில் பொலீஸ் விழுவதா என கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு ராகுல் நான் தான் காதலுக்காக பொலீஸாரின் காலில். விழுந்துவிட்டேன் என பதிலடி கொடுத்துள்ள போதும் ராகுலில் மனைவி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என உத்திரப்பிரதேச பொலீஸார் தெரிவித்துள்ளனர்..!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.