திருமணமாகி 5 நாளில் துடிதுடித்து இறந்த 18 வயது இளம்பெண்..! தேனியில் நடந்த துயரம்..!!
தேனி மாவட்டத்தில் 18 வயதான புதுமணம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு தேனியை சேர்ந்த 22 வயதான சேதுபதி என்ற இளைஞருக்கும் அதே இடத்தை சேர்ந்த சிவசக்தி என்கிற 18 வயது யுவதிக்கும் பெற்றோர்களால் திருமணம் பேசி செய்து வைக்கப் பட்டது.
இதனை தொடர்ந்து மணமகன் வீட்டிற்கு வந்த சிவசக்தி கணவனுடன் மாடியில் உள்ள அறையில் தங்கியுள்ளார். சம்பவ தினத்தன்று மாலை சேதுபதி வெளியே சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். புது மணப்பெண் என்பதால் அறையில் ஓய்வெடுக்கட்டும் என மணமகனின் தாயார் தனது வேலைகளில் கவனம் செலுத்தியுள்ளார்.
நீண்ட நேரமாகியும் மருமகள் கீழே வராமல் மேலே இருந்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என நினைத்து மாமியார் புஸ்பவள்ளி மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு fan பொருந்துவதற்காக போடப்பட்டிருந்த கொக்கியில் தூக்குபோட்டு சிவசக்தி தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்து அலறி துடித்துள்ளார்.
சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் சிவ சக்தியை மீட்டு வைத்தியசாலை எடுத்துச் சென்ற போது சிவசக்தி ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணையை ஆரம்பித்த பொலீஸாருக்கு சிவசக்தி தற்கொலை செய்துகொண்டது உறுதியாகி உள்ளது. ஆனால் ஏன் என்பது யாருக்கும் தெரியவில்லை. சில நேரம் கட்டாய கல்யாணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது..!!