பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் இலங்கை அதிபருக்கு வழங்கிய பரிசு என்ன தெரியுமா??
பாகிஸ்தானின் முன்னாள் அதிபரினால் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு முழுமையாக தங்கத்தினால் செய்யப்பட்ட துப்பாக்கியை பரிசாக வழங்கியுள்ளார். மேலும் இந்த துப்பாக்கி இலங்கை அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருப்பதாக செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் உலகின் பல நாடுகளின் அரச தலைவர்கள் ஒன்றாக அழைத்து அவர்களுக்கு அதிக விலை உயர்ந்த பல பரிசுகளை ஒவ்வொரு நாட்டு தலைவர்களுக்கும் தனித்தனியாக வழங்கி வந்தார். அந்த நிலையில் இலங்கை அதிபருக்கு முழுமையாக தங்கத்தினால் செய்யப்பட்டு இயங்கக் கூடிய நிலையில் துப்பாக்கி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளனர்.
மேலும் இந்த தங்க துப்பாக்கி பரிசுப்பொருட்களை பொலன்னறுவையில் புதிதாக திறக்கப்பட்ட அருங்காட்சியகத்திற்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக செயலக உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.