இலங்கையில் மீண்டும் இன்னொரு உண்ணாவிரத போராட்டமா?
கல்முனை வடக்குப் பகுதியில் உள்ள பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டும் என கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக ஞானசார தேரர் பக்க பலமாக நின்றார்.
இன்னும் இரு தினங்களில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தாவிடின் தொடர்ந்தும் இப் போராட்டம் கல்முனையில் நடைபெறும் என தேரர் கூறியுள்ளார்.
கல்முனை விகாராதிபதி , இந்து குருமார் , கிறிஸ்தவ போதகர்கள் மற்றும் தமிழ் இளைஞர்களும் சேர்ந்து இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கல்முனை விகாராதிபதி ரன் முத்துகல சங்கரத்தின தேரரிடம் அலைபேசி மூலம் கேட்டபோது பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அதனை தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள விகாராதிபதியின் உடல் நலம் பற்றியும் அறிந்து கொண்டார்.