எதிர்வரும் 12 ஆம் திகதி புதிய அரசாங்கத்தின் முதல் நாடாளுமன்றக் குழு கூட்டம்…!!!
கடந்த 16 ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற ஜனதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபாய ராஜபக்ச புதிய அரசாங்கத்தை நிறுவினார்.புதிய அரசாங்கத்தின் முதல் நாடாளுமன்றக் குழு கூட்டம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலமையில் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. புதிய அரசாங்கத்தின் முதல் நாடாளுமன்றக் குழு கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் மாலை 06 மணிக்கு இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
அந்த வேளையில் இடைக்கால அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பாக விவாதங்கள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சி குறித்து குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படும் என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.