எதிர்க்கட்சி தலைவர் பதவி மாத்திரமே சஜித்துக்கு..!! கட்சித் தலைவர் பதவி எனக்கு..!! ரணில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தற்போது வழங்கி இருப்பது பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி மாத்திரமே எனவும் கட்சி தலைவர் பதவியை தொடர்ந்து தானே தலைமை தங்குவதாக அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராக நல்ல முறையில் செயற்பட்டு காண்பிக்க வேண்டும். இதுவே செயல்திறன் கட்சி தலைமைக்கு தகுதியானவரா என்பதை தீர்மானிக்கும் என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜே.ஆர். ஜயவர்த்தன , ஆர்.பிரேமதாச ஆகிய தலைவர்களின் பின் தான் ஐக்கிய தேசியக் கட்சியை 25 வருடங்களாக பாதுகாத்து வருவதாக கூறிய ரணில் விக்கிரமசிங்க தற்போது அதனை வீணடிக்க இடமளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமன்றி ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைவராகும் பொறுப்பை ஏற்கும் திறனை சஜித் பிரேமதாச நிரூபிக்க வேண்டும் என்றும் ரணில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.