இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்ற கோத்தபாய ராஜபக்சவிற்கு வாழ்த்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியம் ..!!!
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற கோத்தபாய ராஜபக்சவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் வாழ்த்து தெரிவித்துள்ளது. சமகாலத்தில் இலங்கையின் ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜப்ரி வென் ஓடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் சகல மக்களினதும் ஜனாதிபதியாக செயற்படப் போவதாக கோத்தபாய ராஜபக்ச அறிவித்திருந்தார். அதனை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்கிறது. அனைத்து தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய சிறுபான்மையினரின் தேவைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் ஒன்றியத்தின் தலைவர் ஜப்ரி வென் ஓடன், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.