இரவில் தூங்கவே முடியாதா ??? யாழ்ப்பாணத்தில் நடந்த கொடூரம்..!!
யாழ் மக்களை அதிகளவு துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது வாள்வெட்டு கும்பல் தான். அப்படிப்பட்ட இந்த வாள்வெட்டுக் குழு நேற்று இரவு கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றினுள் நுழைந்து வீட்டின் கதவு ஐன்னல் மற்றும் வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி, கோடாரியால் கொத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இச்சம்பவம் அரச உத்தியோகத்தர்களது வீட்டிலேயே நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
!Advert!
அந்த வீட்டின் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் அரச உத்தியோகத்தில் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் தமது வீட்டைப் பூட்டி விட்டு வீட்டிற்குள் இருந்துள்ளனர். குறித்த வீட்டிற்கு மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வந்த ரௌடிகள் வீட்டின் மதிலைப் பாய்ந்த வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
!Advert!
அங்கு சென்று வீட்டின் ஐன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கியதுடன் வீட்டில் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளனர். அத்தோடு வீட்டின் முன்பக்க கதவையும் கொத்திவிட்டு மதில் பாய்ந்து தப்பியோடியுள்ளனர்.
!Advert!
அவர்கள் தப்பியோடும்போது, அருகிலுள்ள வீடொன்றில் பூட்டப்பட்டிருந்த சிசிரிவி கமாராவைக் கண்டதும் அதனையும் உடைத்து விட்டு சென்று விட்டனர். சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.