சிலாவத்தை பகுதியில் சற்று முன்னர் விபத்து..!! ஒருவர் உயிரிழப்பு..!!
முல்லைத்தீவில் உள்ள சிலாவத்தை பகுதியில் சற்று முன்னர் கோர விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொக்குளாய் முகத்துவாரம் பகுதியை சேர்ந்தவர்கள் கூலர் வாகனத்தில் ஜஸ் ஏற்றுவதற்காக சிலாவத்தை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் குறித்த வாகனம் வீதியை விட்டு விலகி தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.
!Advert!
சிலாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கூலர் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அந்த வாகனத்தில் பயணித்த இன்னொரு நபரும் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை தீவிரமாக முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.