நாட்டில் நடக்கும் வன்முறைகள் பற்றி தமிழில் பேசிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச..! வைரலாகும் வீடியோ இதோ..!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் இன்னாள் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அவர்கள் இரண்டாவது முறையும் தமிழில் பேசியுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை தமிழில் பேசியுள்ள அவர் மீண்டும் தனது கருத்தை தமிழில் பதிவு செய்துள்ளார்.
நாட்டில் கடந்த மாதம் 21ம் திகதி தொடர் தற்கொலை தாக்குதல் இடம்பெற்றது இதில் 250திற்கு மேற்பட்டோர் மரணமடைந்ததுடன் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து பல இடங்களில் வன்முறைகள் இடம்பெற்றது இதில் ஏராளமான சொத்துகள் சேதமாக்கப் பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.
அத்துடன் மரணமும் நிகழ்ந்தது. இதற்கு காரணம் இன்றைய அரசாங்கம் என குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி இந்த அரசுக்கு உதவிய அனைவரும் இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.!
நன்றி: விக்கி விக்னேஷ்